உடல்நலக் குறைவால் உயிரிழந்த பாகன்.. கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய யானை..!
கேரளாவில் தன்னை சிறுவயதில் இருந்து வளர்த்த பாகனின் உடலுக்கு யானை ஒன்று கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம் கோட்டயத்தில் ஓமன சேட்டன் என்பவர் பிரம்மதேத்தன் என்ற யானையை சிறுவயதில் இருந்தே வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஓமன சேட்டன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடலைப் பார்க்க அழைத்து வரப்பட்ட யானை, சோகத்தோடு தும்பிக்கையை நீட்டி கண்ணீர் வழிய அஞ்சலி செலுத்திய நெகிழவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Comments