"தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதி" விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் -மாநகராட்சி ஆணையர் தகவல்

0 3106
"தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதி" விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் -மாநகராட்சி ஆணையர் தகவல்

டுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கோயம்பேடு காய்கறி சந்தையில் அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு காய்கறி சந்தையில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி இருவரும் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி, கோயம்பேடு காய்கறி சந்தையில் இதுவரை 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments