”மேற்குவங்கத்தில் 3 மணி நேரம் உணவகங்கள் செயல்பட அனுமதி” -மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்கத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊழியர்களை கொண்டு 3 மணி நேரம் உணவகங்கள் செயல்பட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அனுமதியளித்துள்ளார்.
நோய்த்தடுப்பு நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை தளர்வுகற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா குறைந்து வருவதால் தடுப்பூசி செலுத்திய ஊழியர்கள் மூலம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை உணவகங்கள் செயல்பட அனுமதியளிப்பதாக மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.
Comments