கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறைச் செயலர், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

0 2701

மிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். 

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், சென்னை உட்படப் பல மாவட்டங்களில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,  தொற்று பரவல் குறைந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்தும், மூன்றாம் அலை பாதிப்பைத் தடுக்க முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

காய்ச்சல் முகாம்களை அதிகரிப்பது, தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments