பாலியல் புகாரில் சிக்கிய சென்னை தடகள பயிற்சி அகாடமி பயிற்சியாளருக்கு காவல்துறை சம்மன்..

0 3677
சென்னையில் தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு விளையாட்டு அகாடமி பயிற்சியாளருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னையில் தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு விளையாட்டு அகாடமி பயிற்சியாளருக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

நந்தனம் ஜிஎஸ்டி அலுவலகத்தில் உதவி சூப்பிரண்டாக பணியாற்றி வரும் நாகராஜன் என்பவர், பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் என்ற தடகள பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறார். இவர் மீது, 20 - க்கும் மேற்பட்ட தடகள வீராங்கனைகள் தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தில் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என திட்டவட்டமாக மறுத்த பயிற்சியாளர் நாகராஜன், ஒழுங்கு நடவடிக்கைக்காக வெளியேற்றப்பட்ட  வீராங்கனைகள் ஒன்று சேர்ந்து, தம்மை பழிவாங்க, இவ்வாறு புகார் தெரிவிப்பதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில் தான் சென்னை பூக்கடை போலீசார், விசாரணைக்கு ஆஜராகுமாறு பயிற்சியாளர் நாகராஜனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments