தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 2,100 மருத்துவர்கள் நியமனம்..!

0 2275

மிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக கூடுதலாக 2,100 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை, கிண்டி கொரோனா மருத்துவமனைகளுக்கு தலா 75 மருத்துவர்களும், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு 70 மருத்துவர்களும் கூடுதலாக நியமிக்கப்படவுள்ளனர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு 60 மருத்துவர்களும், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு 90 மருத்துவர்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் மாநிலம் முழுவதும் 48 அரசு மருத்துவமனைகளுக்கும் தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments