பைசர், மாடர்னா தடுப்பு மருந்துகளை மத்திய அரசே இறக்குமதி செய்து வழங்க அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்..!

0 2437
பைசர், மாடர்னா தடுப்பு மருந்துகளை மத்திய அரசே இறக்குமதி செய்து வழங்க அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு நேரடியாகத் தடுப்பு மருந்துகளை விற்க பைசர், மாடர்னா நிறுவனங்கள் மறுத்துவிட்டதால், மத்திய அரசே இறக்குமதி செய்து வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரியுள்ளார்.

டெல்லியில் போதிய தடுப்பு மருந்துகள் இல்லாததால் 18 முதல் 44 வயதினருக்குத் தடுப்பூசி போடுவது சனியன்று நிறுத்தப்பட்டது. தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரிப் பிரதமருக்குக் கடிதம் எழுதியதுடன், நேரடியாகத் தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பைசர், மாடர்னா நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை நேரடியாக மாநிலங்களுக்கு விற்க மறுத்து விட்டதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments