மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000 வழங்க முதலமைச்சர் ஆணை..!

0 2593
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000 வழங்க முதலமைச்சர் ஆணை

மிழகத்தின் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக ஐயாயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையும், மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் உள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கடல் மீனவ குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை தலா ஐயாயிரம் ரூபாய் வழங்க 86 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை மீனவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments