கருப்புப் பூஞ்சை நோயை கூர்ந்து கவனிக்கத்தக்க நோயாக அறிவித்துள்ளது உத்தரகாண்ட் அரசு

0 2417

கருப்புப் பூஞ்சை நோயை கூர்ந்து கவனிக்கத்தக்க நோயாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் கருப்பு பூஞ்சை வழக்குகள் அதிகரித்து வருவதால், 1897 தொற்றுநோய் சட்டத்தின் கீழ் மாநிலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நோயாக அறிவிக்கப்பட்டது. இதுவரை, உத்தரகாண்டில் 64 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, அவர்களில் நான்கு பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின் பி என்ற மருந்தை நியாயமான முறையில் விநியோகிப்பதற்காக மாநில அரசு விபரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நோயாளியின் விபரம் மற்றும் நோய்த் தொற்றின் தன்மை குறித்து நிரப்பப்பட்ட படிவத்தை வழங்கி அருகில் உள்ள மருத்துவமனையில் ஆம்போடெரிசின் பி (Amphotericin B )மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments