ஆட்சிக்கு வந்த 15 நாளில் எதிர்க்கருத்துள்ளோரும் முதலமைச்சருக்குப் பாராட்டு; இனிப் போகப்போக அனைவரும் பாராட்டும் நிலை ஏற்படும் -அமைச்சர் சேகர்பாபு

0 2977
ஆட்சிக்கு வந்த 15 நாளில் எதிர்க்கருத்துள்ளோரும் முதலமைச்சருக்குப் பாராட்டு; இனிப் போகப்போக அனைவரும் பாராட்டும் நிலை ஏற்படும் -அமைச்சர் சேகர்பாபு

ட்சிக்கு வந்த 15 நாட்களிலேயே எதிர்க்கருத்து உள்ளவர்களும் திமுக அரசைப் பாராட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், கோவில் சொத்து விவரங்களை இணையத்தளத்தில் பதிவேற்றும் நடவடிக்கைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜக்கி வாசுதேவ் நன்றி தெரிவித்துள்ளாரே..? எனச் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்குப் பதிலளித்த சேகர்பாபு, இனிப் போகப்போக அனைவரும் முதலமைச்சரைப் பாராட்டும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments