இந்தியாவுக்கு 6 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும்..! அதிபர் பைடனுக்கு இந்திய வம்சாவளி எம்பி கோரிக்கை

0 1659

ந்தியாவுக்கு 6 கோடி தடுப்பூசி டோசுகளை வழங்குமாறு அதிபர் ஜோ பைடனுக்கு, இந்தியா வம்சாவளி எம்பியான ராஜா கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரும் அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் ரெவரன்டு ஜெசி ஜேக்சனும் கூட்டாக வெளியிட்டுள்ள கோரிக்கையில், அமெரிக்காவில் புதிய மரபணு மாற்ற வைரசுகள் பரவாமல் இருப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், அதிகம் இருப்பு உள்ள தடுப்பூசியை, தேவை அதிகமாக உள்ள இந்தியா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அடுத்த 6 வாரங்களில் 8 கோடி டாலர் மதிப்பிலான மருத்துவ உதவிகளை இதர நாடுகளுக்கு வழங்க உள்ளதாக அதிபர் பைடன் அறிவித்து நிலையில், ஜனநாயக கட்சி எம்பியான ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments