சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இனி ரெம்டெசிவர் வழங்கப்படாது-சென்னை பெரு நகர காவல்துறை

0 2209
கொரோனா தடுப்பு மருந்தாகக் கருதப்படும் ரெம்டெசிவர் மருந்துகள் இன்று முதல் சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தாகக் கருதப்படும் ரெம்டெசிவர் மருந்துகள் இன்று முதல் சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெரு நகர காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று நோயாளிகள் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளிலேயே ரெம்டெசிவர் மருந்து நாளை முதல் கிடைக்க தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மருந்து தேவைப்படுவோர், நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்துகள் இன்று முதல் வழங்கப்படமாட்டாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments