சென்னையில் ரேஷன் கடைகளில் 2 ஆவது நாளாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம்

0 1851
சென்னையில் ரேஷன் கடைகளில் 2 ஆவது நாளாக அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி விநியோகம்

சென்னையில் சமூக இடைவெளியுடன் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் கொரோனா நிவாரண பணம் வழங்கப்பட்டு வருகிறது.

முதல் நாளான நேற்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் சில கடைகளில் சமூக இடைவெளி இல்லாமலும், முக கவசம் இல்லாமலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று 2 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று சென்றனர்.

இன்று கூட்டம் அதிகம் உள்ள கடைகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று நடவடிக்கை எடுத்தனர். இதனால் கூட்டம் குறைந்து சமூக இடைவெளியுடன் ஒருவர் பின் ஒருவராக நின்று பணம் பெற்று செல்கின்றனர்.

அதைப் போன்று முக கவசம் அணிந்து வந்தால் தான் 2000 ரூபாய் பெற முடியும் என கூறி முக கவசம் இல்லாமல் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments