சென்னையில் புதிய கட்டுப்பாட்டு விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை

0 1015
சென்னையில் புதிய கட்டுப்பாட்டு விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை

சென்னையில் புதிய கட்டுப்பாடுகளை மீறி பத்து மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார் உடனடியாக மூட வைத்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக காலை 10 மணிக்குள் மளிகை கடைகள், காய்கறி மற்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில மளிகை கடைகள், இறைச்சி மற்றும் காய்கறி கடைகள்  10 மணியை கடந்தும் செயல்பட்டு வந்தன.

இதனையறிந்து அங்கு சென்ற  போலீசார் அவர்களை எச்சரித்து உடனடியாக கடைகளை மூட வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments