உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் 9.5 கோடி விவசாயிகளுக்குத் தலா ரூ.2000 விடுவித்தார் பிரதமர் மோடி..!

0 3304
உழவர் உதவித் தொகைத் திட்டத்தில் 9.5 கோடி விவசாயிகளுக்குத் தலா ரூ.2000 விடுவித்தார் பிரதமர் மோடி..!

ழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் 9 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் 19 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பிரதமர் மோடி விடுவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயை மூன்று தவணைகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எட்டாவது முறையாக இன்று ஒன்பது கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு 19 ஆயிரம் கோடி ரூபாயைப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்.

அப்போது பேசிய அவர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் முதன்முறையாக இந்தத் திட்டத்தில் பயனடைவதாகத் தெரிவித்தார். கொரோனா சூழலில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட போதும், தானிய விளைச்சல் புதிய சாதனையை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments