அரபிக் கடலில் உருவாகும் டவ்-தே புயல் காரணமாக கேரளாவின் பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

0 2643
அரபிக் கடலில் உருவாகும் டவ்-தே புயல் காரணமாக கேரளாவின் பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

ரபிக் கடலில் உருவாகும் டவ்-தே புயல் காரணமாகக் கேரத்தின் மூன்று மாவட்டங்களுக்கு இன்றும், 5 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வுநிலை மேலும் வலுப்பெற்று நாளைக்குள் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் கேரளத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்குக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்குக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments