தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டம் என தகவல்

0 5835
தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டம் என தகவல்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, வருகிற ஜூன் 3 ஆம் தேதி, 13 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண சிறப்புத் தொகுப்பை ரேஷன் கடைகளில் விநியோகிக்க தமிழக அரசு முடிவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
இதன்படி, தமிழகம் முழுவதும் 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 798 குடும்ப அட்டைதாரர்கள், இதன் மூலம் பயன் பெற வாய்ப்பு உள்ளது.

கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி விநியோகிக்கப்படும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பில் கோதுமை, உப்பு, ரவை, பருப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments