தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மதுவிற்பனை

0 4326
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மதுவிற்பனை

மிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

நாளை முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதை முன்னிட்டு, மது அருந்துபவர்கள் மது வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 426 கோடியே 24 லட்ச ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் மட்டும் 100 கோடியே 43 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

மதுரை மண்டலத்தில் 87.28 கோடி ரூபாய்க்கும் , திருச்சி மண்டலத்தில் 82.59 கோடி ரூபாய்க்கும் விற்பனை நடந்துள்ளது.

அதே போல சேலம் மண்டலத்தில் 79.82 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 76.12 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments