ஆந்திராவில் இன்று முதல் 18 மணி நேர ஊரடங்கு அமல்..!
ஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் 18 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நண்பகல் 12 மணி முதல் 18 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மக்கள் வெளியில் வருவதற்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மற்ற நேரங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.
நண்பகல்12 மணிக்கு பிறகு பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகா, தெலுங்கானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
Comments