டெல்லியில் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களின் வீடுகளுக்கே நேரடியாக ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகம் துவக்கம்

0 1250

கொரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக ஆக்சிஜன் சிலிண்டரை விநியோகிக்கும் திட்டத்தை டெல்லி அரசு  துவக்கியுள்ளது.

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவுவதால் பலர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு நியாயமான விலையில் வீடுகளுக்கே சென்று ஆக்சிஜன் சிலிண்டரை வழங்கலாம் என டெல்லி அரசு தீர்மானித்துள்ளது.

மிகவும் அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுபவர்கள் delhi.gov. in.  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால் உடனடியாக சிலிண்டர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments