திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

0 14162
ஆக்சிஜன் தட்டுப்பாடு- 4 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அரை மணி நேரத்திற்கு ஒருவர் என 4பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு  மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கு ஒருவர் என அடுத்தடுத்து நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த மருத்துவமனையில் தண்ணீர் , கழிப்பறை சுத்தம் செய்வது உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்ய வேண்டும் என இங்குள்ள நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments