நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..!

0 3414
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..!

நேபாளத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த மாணவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீராப்பள்ளி பகுதியை சேர்ந்த அருள்முருகன், அண்ணகிளி தம்பதியின் மகன் அர்ஜுன், அங்குள்ள கல்லூரியில் பி.ஏ. 2 ம் ஆண்டு படித்து வருகிறார். சிறு வயது முதலே கேரம் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அவர், தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசை வென்றார்.

இந்த நிலையில், சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற அர்ஜுனால், குடும்ப வறுமையால் கலந்து முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, சீராப்பள்ளி போதி அறக்கட்டளை உதவியுடன், கடந்த 28 ம் தேதி நேபாளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments