லண்டனில் ஜி-7 மாநாட்டுக்கு சென்ற இந்திய குழுவில் 2 பேருக்கு கொரோனா

0 1274

ண்டனில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சென்ற இந்திய குழுவினரில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், முழு குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு அதில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு தினமும் கொரோனா சோதனை நடத்தப்படுகிறது.

அதில் இந்திய பிரதிநிதிகள் 2 பேருக்கு தொற்று உறுதியானதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மாநாட்டில் பங்கேற்கும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

இனிமேல் இந்திய குழுவினர் காணொலி வாயிலாக மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments