இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றை பரிசோதனை நடத்த அனுமதி

0 4146

இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றை பரிசோதனைகளை மேற்கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

பரிசோதனைக்கான காலம் 6 மாதம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடோபோன் ஐடியா, MTNL, ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5 ஜி முறை அமலுக்கு வந்தால்  தற்போதுள்ள 4 ஜி டவுன்லோடு வேகம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் தற்போதைய கட்டணங்களை விட பத்து  மடங்கு கட்டணம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments