ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருந்த 1212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி; கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நடவடிக்கை

0 4783
ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருந்த 1212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 1212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2015 - 16ஆம் ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வாணயம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1212 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர்.

இவர்களுக்கான ஒப்பந்த காலம் வருகிற 5ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், கொரோனா அதிகரித்து வருவதால் மருத்துவ பணியாளர்களின் தேவை கருதி, அவர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பணி ஆணையுடன் செவிலியர்கள் அனைவரும் 10-ஆம் தேதிக்குள் சென்னைக்கு வர வேண்டும். பின்னர், தேவை அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments