முன்கள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டித்தது மத்திய அரசு..!

0 2238
முன்கள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை மேலும் 6 மாதம் நீட்டித்தது மத்திய அரசு..!

முன்கள சுகாதார பணியாளர்களுக்கான காப்பீடு திட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்கள பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் கொரோனா பரவி வரும் நிலையில், பல்வேறு அதிகாரம் பெற்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் காணொலி மூலம் ஆய்வு நடத்தினார்.

இதன் பின்னர் முன்கள சுகாதார பணியாளர்களுக்கான இந்த காப்பீட்டு திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments