சென்னையில் கொரோனா இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக குறைந்துள்ளது : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

0 3052

சென்னையை பொறுத்த வரையில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக குறைந்து இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை சிஐடி  நகர் பகுதியில் மாநகராட்சி களப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பணி திட்டமிடல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும், இதன் மூலம் அவசர ஊர்திகள் மருத்துவமனையில் காத்திருப்பது தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அவசர ஊர்தி தயார் நிலையில் இருக்கும் என்றும் ஆணையர் பிரகாஷ் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments