திருச்சியில் வாடிக்கையாளர்கள் பெயரில் ரூ. 9 கோடி முறைகேடு; தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் 5 பேர் பணி நீக்கம்

0 1710
திருச்சியில் வாடிக்கையாளர்கள் பெயரில் ரூ. 9 கோடி முறைகேடு; தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் 5 பேர் பணி நீக்கம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வாடிக்கையாளர்கள் பெயரில் 9 கோடி ரூபாய் அளவுக்கு கையாடல் செய்ததாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கப் பணியாளர்கள் 5 பேர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வரதராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து அங்கு 2016 முதல் 2018 வரையிலான கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் வாடிக்கையாளர்கள் பெயரில் மோசடியாக கடன் பெற்றது உட்பட பல வகைகளில் சுமார் 9 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து கடன் சங்கத்தின் செயலாளர், எழுத்தாளர், காசாளர் என 5 பேர் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments