உத்தரப்பிரதேசத்தில் 14 நாட்கள் பொதுமுடக்கத்தை அறிவிக்க அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தல்

0 4200

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 5 நகரங்களில் 14 நாட்கள் பொதுமுடக்கத்தை அறிவிக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அம்மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பான சிக்கல்களைக் கண்ட நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. வழக்கு விசாரணையின் போது, மாநிலம் முழுவதும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.

மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையையும் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், அதிகம் என கூறப்படுபவை அனைத்தும் காகித அளவிலேயே இருப்பதாக விமர்சனம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments