”கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4000 ரயில் பெட்டிகள்” -ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

0 4072
”கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4000 ரயில் பெட்டிகள்” -ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

கொரோனா தொற்றால் மிதமான பாதிப்பு ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக 4 ஆயிரம் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றி தயராக இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைக்காத சூழல் உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு சுமார் 4 ஆயிரம் ரயில் பெட்டிகளில் 64 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 169 ரயில் பெட்டிகள் பல்வேறு மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments