புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலி; கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க குவிந்த மதுப்பிரியர்கள்..!

0 3753
புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டதன் எதிரொலி; கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க குவிந்த மதுப்பிரியர்கள்..!

புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கடலூரில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் மதுவாங்க குவிந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக வருகிற 30-ம் தேதி வரை மதுக்கடைகளை மூடுவதாக புதுச்சேரி அரசு அறிவித்தது. இதன் எதிரொலியாக கடலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவரும் 10 முதல் 15 பாட்டில்களை வாங்கி சென்றனர்.

அதில் பெரும்பாலானோர் புதுச்சேரியில் இருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments