கொரோனாவைக் காரணம் காட்டி இந்தியாவுக்கான வர்த்தக விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்திய சீனா

0 2010
கொரோனாவைக் காரணம் காட்டி இந்தியாவுக்கான வர்த்தக விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்திய சீனா

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவுக்கான சரக்கு விமான சேவையை சீனா ரத்து செய்துள்ளது.

சீனாவின் சரக்கு விமான போக்குவரத்து நிறுவனமான சிச்சுவான் ஏர்லைன்ஸ் டெல்லிக்கு 6 வழித்தடங்களில் இயங்கும் சரக்கு விமானங்களை 15 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

15 நாட்களுக்குப் பின் கொரேனா பரவல் கட்டுக்குள் வரும் பட்சத்தில் மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த முடிவால் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிற மருத்துவ பொருட்களை வாங்குவதற்கான தனியார் வர்த்தகர்களின் முயற்சிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments