மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு 2வது முறையாக பெருந்தொற்று உறுதி

0 1973
மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு 2வது முறையாக பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவுக்கு 2வது முறையாக பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தானும், தனது மனைவியும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு 2வது முறை தொற்று ஏற்பட்டுள்ளதால் மேற்கு வங்கத் தேர்தலில் தன்னால் வாக்களிக்க முடியாது என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியிலிருந்து இருமுறை எம்.பியாக தேர்வான பாபுல் சுப்ரியோ தற்போது அங்கு டோலிகங்கே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments