பிஎம்-கேர்ஸ் நிதியில் இருந்து நாடு முழுவதும் புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு

0 4228

 PM CARES நிதியில் இருந்துநாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவமனைகளுக்கு கூடுதல் ஆக்சிஜனை சப்ளை செய்யும் நோக்குடன், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்களை கூடிய விரைவில் அமைத்து செயல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்தந்த மாவட்டத்திற்கான ஆக்சிஜன் தேவை இந்த நிலையங்களில் இருந்து நிறைவேற்றப்படும். அது தவிர ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்கவும் இந்த திரவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments