நாட்டில் கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன -ரயில்வே அமைச்சகம் தகவல்

0 3277
நாட்டில் கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன -ரயில்வே அமைச்சகம் தகவல்

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கும் தனிமைப்படுத்தலுக்கும் மூவாயிரத்து 816 ரயில் பெட்டிகள் தயாராக உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்ற வசதிகளுடன் ரயில் பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரயில்வே துறை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அதன்படி இன்றைய நிலவரப்படி மூவாயிரத்து 816 ரயில் பெட்டிகள் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் வசதிகளுடன் தயாராக உள்ளன. மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து மத்தியப் பிரதேசம் போபாலுக்கு 20 பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments