லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்குச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து : 130 பேர் வரை நீரில் மூழ்கி மாயம்

0 3689
லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்குச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து : 130 பேர் வரை நீரில் மூழ்கி மாயம்

லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்குச் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 130 பேர் வரை உயி ரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

திரிபோலியிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்வதற்காக நூற்றுக்கும் அதிகமானோர் காற்றடைத்த ரப்பர் படகுகளில் சென்றனர்.

மத்திய தரைக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தப் படகில் பயணம் செய்த 130 பேர் வரை நீரில் மூழ்கி மாயமாகினர். தகவலறிந்த ஓஸியன் வைக்கிங் என்ற கப்பலில் வந்தவர்கள் விபத்து நடந்த இடத்தில் 10க்கும் மேற்பட்டவர்களின் உடல்களைக் கைப்பற்றினர்.

எஞ்சியவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments