ஏப்-26 முதல் புறநோயாளிக்களுக்கான சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம் - புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம்

0 1163
ஏப்-26 முதல் புறநோயாளிக்களுக்கான சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம் - புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்களை கவனிப்பதற்கு அதிகளவிலான மருத்துவப் பணியாளர்கள் தேவையின் காரணமாக வரும் 26ம் தேதி முதல் புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவது,தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புறநோயாளிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலமாக புறநோயாளிகள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments