சென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்

0 2709
சென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை வசதியை 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தரமணியில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தொள்ளாயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவமனைகள் தவிர்த்து, சென்னையில் கல்லூரிகள், விடுதிகள் என 14 இடங்களில் 12 ஆயிரத்து 600 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments