4002 ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் படுத்தியது ரயில்வே

0 3822
கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரெயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 4,002 பெட்டிகளை மாற்றி தயார் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரெயில் பெட்டிகளில் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments