பாகிஸ்தானில் போராட்டக்காரர்களால் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்ட11 போலீசார் விடுவிப்பு

0 2353
பாகிஸ்தானில் போராட்டக்காரர்களால் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்ட11 போலீசார் விடுவிப்பு

பாகிஸ்தானில் போராட்டக்காரர்களால் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்ட11 போலீசார் விடுவிக்கப்பட்டனர்.

பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்றில் வெளியான கேலி சித்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானிலுள்ள தெஹ்ரிக் -இ- லப்பைக் (ehreek-e-Labbaik) அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதனையடுத்து அந்த அமைப்பை தடை செய்த பாகிஸ்தான் அரசு, அதன் தலைவரை கைது செய்தது. இதனால் ஆத்திரமடைந்த தெஹ்ரிக் -இ- லப்பைக் ஆதரவாளர்கள், லாகூரில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன்,  11 போலீசாரை பிணை கைதிகளாக பிடித்தனர்.

தொடர்ந்து பாகிஸ்தான் அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 11 போலீசாரும் விடுவிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments