மேற்கு வங்க தேர்தல் பிரசாரம் : அனைத்து தலைவர்களும் சிந்தித்து முடிவு எடுக்க ராகுல்காந்தி வேண்டுகோள்

0 6189
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.

8 கட்ட தேர்தலில், மேற்கு வங்கத்தில் இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. அங்கு, தேர்தல் பிரசாரத்தை 72 மணி நேரத்திற்கு முன்னதாக முடிக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில், மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் - பேரணிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக தமது டுவிட்டர்
வலைப்பதிவு மூலம் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலையில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அனைத்து அரசியல் தலைவர்களும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments