கொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை குறைப்பு

0 1964
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் திருப்பதி தேவஸ்தானம், வரும் மே மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 25 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக குறைத்துள்ளது சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை நாளை மறுநாள் முதல் தேவஸ்தானம் இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments