தமிழகத்தில் கொரேனா 2வது அலை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது: சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்

0 22219

கொரொனாவின் இராண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிட்டதாக, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வழக்கு ஒன்றில் காணொலி மூலம் ஆஜரான அவரிடம், கொரோனாவின் 2ஆவது அலை குறித்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி வினவியுள்ளார். அப்போது, கொரோனாவின் 2ஆவது அலை கைமீறி சென்றுவிட்டதாக குறிப்பிட்ட தலைமை வழக்கறிஞர், தற்போதைய நிலையில் பெருந்தொற்று எப்படி செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் அறுதியிட்டு கணிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய தடுப்பு  நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள, சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணனை, தலைமை நீதிபதி அழைத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments