சிஎஸ்கே அணிக்கு வந்த சோதனை..! தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்?

0 6108
சிஎஸ்கே அணிக்கு வந்த சோதனை..! தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்?

பில் டி20 தொடரின் முதல் ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோல்வியை தழுவியது மட்டுமின்றி, பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

14வது ஐபில் டி20 தொடர் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. ஏப்ரல் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 188 ரன்கள் குவிந்தது. நீண்ட நாள்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த ரெய்னா சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்ட கேப்டன் மகேந்திர சிங் தோனி டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தினால் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை எடுத்தது.

தொடர்ந்து 189 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 8 பந்துகள் மீதமிருக்க 190 ரன்களை குவித்து வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் முதல் முறையாக டெல்லி அணிக்கு இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கேப்டனாக பொறுப்பு ஏற்றிருந்த நிலையில் அந்த அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்திலேயே சென்னை அணி தோல்வியை தழுவ, நேரத்தில் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை விட பந்து வீச சிஎஸ்கே வீரர்கள் கூடுதலான நேரத்தை எடுத்துக் கொண்டதால் கேப்டன் தோனிக்கு அபராதம் விதித்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஐபிஎல் விதிப்படி 20 ஓவர்கள் கொண்ட ஒரு இன்னிங்ஸை 90 நிமிடங்களில் முடிக்கவேண்டும். ஒரு மணி நேத்திற்குள் 14.1 ஓவர்கள் வீசி முடித்திருக்க வேண்டும். 90ஆவது நிமிடத்தில் 20ஆவது ஓவரை துவங்கியிருக்க வேண்டும். இந்த காலக்கெடுவை மீறினால் அது தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படும் என்பது ஐபிஎல் விதியில் உள்ளது. ஆனால், டெல்லி அணியை எதிர்கொண்ட சென்னை அணி வீரர்கள் பந்துக்களை வீச நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால் இந்த நடவடிகையை ஐபிஎல் நிர்வாகம் எடுத்துள்ளது.

சென்னை அணியை தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணியின் ப்ரித்விஷா மற்றும் தவான் கூட்டணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டி 13 ஓவர்களுக்கு 138 ரன்களை குவித்தனர். தவான் மற்றும் பிரித்விஷாவின் பேட்டிங் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு சவால் விட, அவர்கள் பந்து வீச நேரம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், வான்கடே மைதானத்தில் மாலை நேரத்தில் இருந்த பனிப்பொழிவும் வீரர்களின் பந்து வீச்சுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதாக தோனி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் இது முதல் முறை என்பதால் சிஎஸ்கே அணிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை பந்து வீச இதுபோல் அதிகநேரம் எடுத்துக்கொண்டால் கேப்டனுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதமும், அணி வீரர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் தவறு நிகழ்ந்தால் கேப்டனுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments