மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு: வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறும் என மத்திய கல்வித்துறை அறிவிப்பு

0 2237

நாடு முழுவதுமுள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான CUCET எனப்படும் பொது நுழைவுத் தேர்வு வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும், நடப்பு ஆண்டில் இளங்கலை படிப்புகளுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கணினி வழியாக 3 மணி நேர தேர்வாக நடைபெறும், பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு விரைவில் துவங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments