ஓய்வுப் பெற்ற ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாக கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி - 2 பேர் கைது
"வடக்கு ரயில்வே சார்பில் 71 முன்பதிவற்ற ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும்" -அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
இந்திய ரயில்வே வடக்கு மண்டலப் பிரிவில் முன்பதிவு செய்யப்படாத 71 பயணிகள் ரயில்களை நாளை முதல் இயக்க உள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், வடக்கு மண்டலத்தில் 71 முன்பதிவற்ற ரயில்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் யுடிஎஸ் ஆன் என்ற செயலியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்ட அமைச்சர், இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
Comments