"கஜா" வழக்குகள் வாபஸ் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி..!

0 3301
"கஜா" வழக்குகள் வாபஸ் பெறப்படும்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி..!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஜா புயல் நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியனை கடுமையாக விமர்சித்ததோடு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஜா புயல் நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்தார்.

மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகும் நிலை இருப்பதாக வேதனை தெரிவித்த மு.க.ஸ்டாலின், மத்திய அரசு அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறினார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தனது நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments