ஹோலிக்கு மது கிடைக்காததால் சானிடைசரைக் குடித்த இளைஞர்கள் பலி!

0 4061
ஹோலிக்கு மது கிடைக்காததால் சானிடைசரைக் குடித்த இளைஞர்கள் பலி!

மத்தியப் பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்காக மதுவுக்கு பதில் சானிடைசரைக் குடித்த இருவர் உயிரிழந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக மத்தியப் பிரதேசத்தில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் மதுக்கடைகளை மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பிந்த் மாவட்டத்தில் மதுபானம் கிடைக்காததால் 3 இளைஞர்கள் சானிடைசரைக் குடித்தனர்.

பின்னர் அவரவர் வீடுகளுக்குத் திரும்பியதும் மீண்டும் சானிடைசரை தண்ணீரில் கலந்து குடித்துள்ளனர். இதனால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments