பஞ்சாபில் பாஜக சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கியவர்கள் விவசாயிகள் இல்லை: விவசாய சங்கத் தலைவர் விளக்கம்

0 2880

பஞ்சாபில் பாஜக சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கியவர்கள் விவசாயிகள் இல்லை என விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் மாலுத் என்னுமிடத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் நாரங்குக்குக் கருப்புக் கொடி காட்டினர். விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினரைத் தாக்கி அவரது சட்டையைக் கிழித்ததாகச் செய்திகள் வெளியாகின.


தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், விவசாயிகளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்கும் வகையில் பாஜகவினரே தாக்கியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments