தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஒடிசாவில் இருந்து சென்னை வந்தடைந்தனர் துணை ராணுவம் படையினர்

0 1852
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஒடிசாவில் இருந்து துணை ராணுவம் வருகை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஒடிசாவில் இருந்து ஏழு கம்பெனி துணை ராணுவ படையினர் ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் 235 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபட உள்ளதாகவும் முதற்கட்டமாக 65 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஒடிசாவில் இருந்து ஏழு கம்பெனி துணை ராணுவ படையினரை சேர்ந்த 705 பேர் ரயில் மூலம் சென்னை வந்துள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments